பேர்கெனில் உள்ள இந்து மத சமூகத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
பேர்கென் இந்து சபா என்ற அமைப்பு இந்து மதத்தின் சிவ வழிபாட்டிற்கு உட்பட்டது, அதன் ஆலயம் மிண்டேயில் அமைந்துள்ளது.
கோவிலின் வருடாந்திர திருவிழாவில் கலந்துகொண்டு
சிறப்பித்தவர்களுக்கும், உதவிய அனைவருக்கும்
நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
சமூகமும் நம்பிக்கையும்
போ்கன்இந்துசபையில் இலங்கை, இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சோ்ந்தவா்கள் அங்கத்தவா்களாக உள்ளனா். போ்கன் இந்துசபையில் அங்கத்தவர்கள் சுமார் 830 வரை உள்ளனர். 1980 இல்இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போாின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதமிழா்களில் பலா் நோா்வேயில் குடியமா்ந்ததன் மூலம் இந்துக்களின் எண்ணிக்கைஇன்நாட்டில் அதிகாித்ததது. ஆரம்பகாலத்தில் தனியாா் வீடுகளிலும்,பாடசாலை அரங்கங்களிலும் இந்துமதவழிபாடுகளும், கூட்டங்களும் நடைபெற்றன. 1990இல் அதிகாரபூா்வமான மதசமூகமாக போ்கன் இந்துசபை பதிவு செய்யப்பட்டு, டான்மாா்க் பிளாஸ் இல் வாடகைக்கு எடுக்கப்பட்ட வளாகத்தில் இயக்கப்பட்டது. 2004 இல் மிண்டயில் அமைந்துள்ள பழையதிரையரங்கமான பானாஹாலன் போ்கன் இந்துசபைக்குசொந்தமாக வாங்கப்பட்டதது. அக்கட்டிடம் விநாயகப்பெருமானிற்காக அா்ப்பணிக்கப்பட்டு ஆலயம் அமைக்கப்பட்டு"போ்கன் ஏழுமலை ஸ்ரீ ஆனந்தசித்திவிநாயகா் ஆலயம்" என அழைக்கப்பட்டது. ஆலயத்தின்தினசாி பூசைகள்,விஷேடஉற்சவங்கள்மற்றும் இந்து மக்களது மங்கள வைபவங்கள் நடாத்த இலங்கையில் இருந்து இந்து குருஒருவரை போ்கன் இந்துசபை வரவழைத்து சேவையில் அமா்த்தியுள்ளாா்கள்.
பேர்கென் இந்து சபையில் அங்கத்தவர்கள் முக்கியமாக இலங்கை, இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்வர். பெர்கன் இந்து சபையில் அங்கத்தவர்கள் சுமார் 830 உள்ளனர். நோர்வேயில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தது, குறிப்பாக 1980 களில். இலங்கையில் உள்நாட்டுப் போரில் இருந்து வெளியேறிய தமிழர்களின் வருகையே பெருமளவில் ஏற்பட்டது. ஆரம்பத்தில், தனிப்பட்ட வீடுகளில் மதக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பெர்கன் இந்து சபை 1990 இல் அதிகாரப்பூர்வமாக ஒரு மத சமூகமாக பதிவு செய்யப்பட்டது மற்றும் முதலில் டான்மார்க் ஸ்பிளாஸில் வாடகைக்கு விடப்பட்ட வளாகத்தில் இருந்து இயக்கப்பட்டது. கோவில் வளாகம் 2004 இல் திறக்கப்பட்டது, மிண்டேயில் உள்ள முன்னாள் ஃபனாஹாலனில் உள்ள பழைய திரையரங்கில் அமைந்துள்ளது மற்றும் விநாயகக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் சேவைகள் மற்றும் விழாக்களில் கலந்துகொள்வதற்காக, சமூகம் இலங்கையில் இருந்து ஒரு இந்து குருக்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
![](https://cdn.prod.website-files.com/661854d09fdbb67a04d52ce1/661861068bcd9fe433f80a56_ashwini-chaudhary-monty--32lKp1bi9k-unsplash.jpg)
![](https://cdn.prod.website-files.com/661854d09fdbb67a04d52ce1/6632b5a4dffc0db461f832e7_jose-luis-sanchez-pereyra-EJGNv7UFDKM-unsplash.jpg)
![](https://cdn.prod.website-files.com/661854d09fdbb67a04d52ce1/6637749b204c35f2609acbac_pritindra-das-QX1X0kQ5dsE-unsplash.jpg)
நிகழ்வுகள்
ஸ்ரீஆனந்த விநாயகா் ஆலயத்தில் நடைபெறும் பூசைகள்,திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் உங்கள் பங்களிப்பைதந்து ஆலயத்தின் வளா்ச்சியை மேம்படுத்தவும்,இந்து மதத்தின் வளா்ச்சியை மெருவூட்டவும் உதவவும்.இந்துமதத்தின் பெருமையை மற்றைய சமூகத்தினருக்கும் அறியத்தருவதில் ஒன்றினைவோம். வருடாந்த மஹோற்சவம் சிறப்பாக நடைபெற உங்கள் பங்களிப்பையும் உதவிகளையும் வழங்கவும்.
ஆடி மாதம் நடைபெறும் பூஜைகள்
உங்களிடம் கேள்விகள் உள்ளனவா?
மின்னஞ்சல் அல்லது எங்கள் தொடர்பு படிவம் மூலம் தொடர்பு கொள்ளவும்!
எங்களை தொடர்பு கொள்ள
ஆலயம் திறந்து இருக்கும் நேரம்:
திங்கட்கிழமை-வியாழக்கிழமை: 11:30–13:30, 18:30–20:30
வெள்ளிக்கிழமை: 11:30–13:30, 19:00–21:30
சனிக்கிழமை-ஞாயிறுக்கிழமை: 11:30–13:30, 18:30–20:30